Saturday, 26 November 2011
Friday, 25 November 2011
Thursday, 24 November 2011
அன்பு அம்மாவிற்கு....
உலகின் ஒளி
வருத்துகிறது அம்மா
குவார்ட்டரில் விஷம்
கலந்து வருகிறேன்
உன் கருவறை இருளில்
செத்துப் போக
உன் நைந்த புடவையில்
தூக்கிட்டுச் சாகும்
வரம் வேண்டும்
தா தாயே
காமம் கரைந்து விட்டது
குடி அலுத்து விட்டது
உயிரின் மறுபக்கம்
ஒட்டிக் கிடக்கும் உன்
புகைப்படத்தை இப்போதுதான்
பார்த்தேன் என் அம்மா
என்ன செய்தேன் உனக்கு
பொய்களை பரிசளித்தேன்
போதாமையில் தவிக்க விட்டேன்
உன் புருஷனின் சாயல் கொண்டேன்
இருந்தும் என்னை
மன்னிக்கும் உனது கண்ணீரில்
எனது மரணம்
புன்னகைக்கிறது அம்மா
அழுக்கு முந்தானையில்
அழும் பிள்ளையோடு
தாய் தந்த பிச்சையிலே பாடும்
குருட்டு சிறுக்கி
என்னை மிதித்துக் கொன்றால்
மகிழ்ந்து மரிப்பேன்...
சதை எறிந்த
சிதை மேட்டில்
என்ன செய்கிறாய்
சின்னப் பையா
அம்மா போய் விட்டாள்
அப்பாவிடம் கோபித்துக் கொண்டு...
காய்த்த உன் கைகளை
தடவினேனில்லை
வெடித்த உன் பாதங்களை
வருடினேனில்லை
நீ வரக்கூடாத
இடுகாட்டில் அம்மா
என் பிணத்தை
நாய்கள் தின்னட்டும்
கருவறையில் புரண்டவன்
கடைசிவரை திருந்த மாட்டான்
என தெரிந்த பிறகும்
முத்தமிடுகிறாய்
முலைப்பாலிட்ட
அதே அன்போடு
அகாலத்திலும் இருமும்
பேரழகி பெருந்தேவி
உன் நெஞ்சுச் சளிஎல்லாம்
நெய்யாகி எரியுதடி
என் 'உயிர் விளக்கு'
தற்கொலை முயற்சியில்
பிழைத்து
நீ மருத்துவமனையில்
இருந்த இரவில்
அழுது கொண்டே
அத்தை வீட்டில்
சாப்பிட்டவன் நான்
அம்மா ஐ லவ் யூ...
(இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசித்த கவிதை ,
எப்போது படித்தாலும் கண்ணில் நீர் வரவழிக்கும் வரிகள்)
Tuesday, 22 November 2011
என் காதல்...!
உன்னைப் பற்றிய நினைவுகளை
கவிதைகளாக பதியச் சொல்லி
நச்சரிக்கிறது
உன்னால் கைவிடப்பட்ட
எனது தனிமை
அம்மாவிடம் அழுது புலம்பியும்
அந்த பொம்மையை
அடைய முடியாத
அப்பாவி குழந்தையின்
ஏமாற்றத்தில் தெரிகிறது
உனக்கான எனது காதல்
உனக்கான கவிதைகளில்
நான் உருவாக்கிய
உவமைகளிலும்
உருவகங்களிலும்
உடனிருந்தே பயணப் படுகிறது
எனது சிந்தனை...
நீ இல்லாது
நகர்ந்து விட்டன
நாட்கள் நூறு
ஆச்சர்யம்தான் எனக்கும்
நீ இல்லாது விலகும்
வெற்றுக் கணத்தில்
வீழ்ந்து விடுவேன்-என்றுதான்
எண்ணியிருந்தேன்
கவிதைத் தோழன்தான்
காப்பாற்றியிருக்கிறான்
நம் காதலையும் சேர்த்து...
உன்னிடம் பேசத் தவறிய
வார்த்தைகளையும் சேர்த்து
வரைந்து விட்டது-என் கரம்
பேனா வழியாக
கவிதைகளாக...
நீ
பிரயானப்படும் பொழுதுகளில்
உன்னைப் பின்தொடரும்
என்னை திரும்பி பார்த்து -நீ
குறைத்துக் கொண்டே செல்லும்
இடைவெளியில் நிரம்புகிறது..
நமக்கான காதல்...
நீ ஓட்டி செல்லும்
மிதிவண்டி கூட சமயங்களில்
இறக்கை இல்லாத
விமானமாகத்தான் தெரிகிறது
எனக்கு...
அன்றொரு நாள் நாம்
கல்லூரிக்குள் நிறுத்தி வைத்திருந்த
சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று
பிணைந்திருந்தன...
காதலுக்குப் பின்
நாம் இருக்கப்போகும்
நிலையை ஞாபகப் படுத்திய படி...
மொழிகள் பல
கற்றதும் சரி
மறந்ததும் சரி
அனைத்தும் உன்னால்...
நீ புலர வைத்த
பொழுதுகள் எத்தனை என
எண்ணிப்பார்க்கின்றேன்
கணக்கின் கால்
வழுக்கி விடுகின்றது...
நீ வந்து
வசித்த பின்னர்தான்
'காளையார்கோவில்' எனக்கு
காதலியார் கோவில் ஆனது...
நீ வந்து சென்ற
பேருந்தின் கைப்பிடியில்
பதிந்திருக்கின்றன
உன் கைரேகையும்
அதன்மேல் என் கைரேகையும்
நம் இருவருக்குமிடையில்
பரவிக் கிடக்கும்
பரிதவிப்புகளில் -என்னை
நான் மீட்டுக் கொள்கிறேன்
உன்னிடமிருந்து...
காலம் கடந்துவிட்ட-என்
காதலை எத்தனை முறைதான்
காட்டிக் கொடுப்பது
உன்னிடம்?
எப்பொழுதும் உன்னிடம்
விளையாடிக் கொண்டிருக்கும்
உன் வீட்டு
செல்ல நாய்க்குட்டி கூடவா
சொல்ல வில்லை ?
பூட்டியிருக்கும் என்று
தெரிந்திருந்தும் உன் வீட்டிற்கு
ஒவ்வொரு
ஓணம் பண்டிகைக்கும்
வாழ்த்து சொல்ல
ஓயாமல் வந்து செல்லும்
என்னைப் பற்றி...
-மணி மைந்தன்
(அவளை விட்டு பிரிந்து முதன் முதலாக சென்னை சென்ற பொது தனிமையில் எழுதிய கவிதை.
*காளையார்கோவில் என்பது எங்கள் ஊர்..
*ஓணம் பண்டிகைக்கு கேரளம் சென்று விடுவது அவள் வீட்டார் வழக்கம். )
Monday, 21 November 2011
Saturday, 19 November 2011
யாசகம்
எல்லோரும் கவி எழுத
தனிமையில் யோசிப்பார்கள் ....
நான் மட்டும்

உன் புகைப்படத்திடம்
யாசிப்பேன்...!
-மணி மைந்தன்
Subscribe to:
Posts (Atom)









