அமாவாசை இரவில்கூட
நிலாச்சோறு சாப்பிடலாம்.....
அருகில் நீ இருந்தால்......
உன் தங்க நிறத்துக்காக மட்டுமல்ல
உன் தங்க குணத்துக்காகவும்
எழுதித் தரலாம் தமிழ்நாட்டை....
ரசிகனாகவே இருந்துவிட
நான் தயார்...
கடைசிவரை நான் ரசிக்கும்
கவிதையாக
நீ இருப்பாயேனில்.....
-மணி மைந்தன்